Edappadi Palaniswami reviews that two traitors have united!
ஜீரோவும், ஜீரோவும் சேர்ந்தால் ஜீரோ வருவது போலத்தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ops ஐ விமர்சனம் செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போலத்தான். ஜீரோவும், ஜீரோவும் சேர்ந்தால் ஜீரோ வருவது போல், டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தது உள்ளது. டி.டி.வி. தினகரன் நடத்தி வரும் அமமுக கட்சி காலியாகி வருகிறது. டி.டி.வி.தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது காலியான கூடாரத்தில் ஒட்டகம் சேர்ந்ததை போன்ற நிலை தான்.
பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எங்கே? சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது அவர் திமுகவின் பி டீம் என்பதை உறுதிபடுத்தியுள்ளது” என்றார்.