agni-natchathiram-start-form-today
தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதியில் கோடைக்காலம் தொடங்குகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் இருந்தாலும், கடந்த இரு வாரங்களாக சற்றே வெப்பம் குறைந்து, பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. சூரியன் தனது உச்சபட்ச வெப்பத்தை தமிழ்நாட்டில் மேல் கொட்டும் இக்காலம் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது.