• September 19, 2024

அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூட உத்தரவு !

Anganwadi centers and schools ordered to be closed from April 12 to April 16!

Anganwadi centers and schools ordered to be closed from April 12 to April 16!

அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

புவனேஸ்வர், ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு,

அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் சீராக வழங்கிட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

தீவிரமான வெப்ப அலை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 12 ஆம் வகுப்பு வரை,

நாளை முதல் ஏப்ரல் 16 வரை மூடப்படும் என்று முதல் மந்திரி நவீன் பட்நாயக் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Read Previous

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ், சுதாகருக்கு சம்மன்!

Read Next

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular