Pilot from Madurai killed in military helicopter accident
அருணாசால பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருத 2 பைலட்டுகளும் பலியாகினர். இந்த நிலையில் உயிரிழந்த 2 பைலட்டுகளில் ஒருவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இன்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.ஹெலிகாப்டரில் சென்ற 2 ராணுவ விமானிகளின் நிலை குறித்து தெரியாமலேயே இருந்தது. அவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஹெலிகாப்டரின் சேத பாகங்கள் மண்டலாவின் கிழக்கு கிராமமான பங்களாஜாப் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு பைலட்டுகளுமே பலியானது தெரியவந்தது. உயிரிழந்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டன