Don’t ask me about Vijay! – S.A. Chandrasekhar
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு, நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வந்திருந்தார்.
இந்த தகவல், ஆரணி முழுவதும் பரவியதால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். அப்போது சாமி கும்பிட்டுவிட்டு வெளியேவந்த எஸ்.ஏ.சியிடம், நடிகர் விஜய்யின் எதிர்காலம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ நடிகர் விஜய் எதிர்காலம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் விஜயிடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.