நடிகர் விஜய், வெங்கட்பிரபு உடனான தனது 68-வது படத்திற்கு பிறகு ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. மேலும் 2024 மே மாதத்திற்குள் லியோ படத்தின் படப்பிடிப்பை முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், நடிப்பை சிறிது காலம் நிறுத்தி விட்டு களப்பணிகளில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், இதில் துளிகூட உண்மை இல்லை என்றும் விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு உடன் தளபதி 68-படத்திலும், அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் படத்திலும், மூன்றாவதாக மாற்றொரு படத்திற்கு கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்த 3 முதல் 5 வருடங்களுக்கு அவர் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் இனி வேறு யாருக்கும் கால்ஷீட் கொடுக்கும் நிலையில், விஜய் இல்லை என்பதாலையே, இது போன்ற தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருவதாக நடிகர் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.