கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதம் ! – விசாரணை ஒத்திவைப்பு!

கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணையை அக்டோபா் 10-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் கூகுள் குரோம், யூடியூப் போன்ற தனக்குச் சொந்தமான செயலிகளை கட்டாயமாக நிறுவி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்கள் இதனால் வேறு வழியின்றி, கூகுள் நிறுவன செயலிகளையே பெரும்பான்மையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கூகுளின் போட்டி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ அமைப்பு ரூ.1337.76 கோடி அபாரதம் விதிக்கப்பட்டது.

Read Previous

 “விஷால் 34” படபிடிப்பு இன்று தொடக்கம்!

Read Next

மீண்டும் தொடங்கிய விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular